நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அமெரிக்காவில் பனிப்புயல்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக, இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :26 டிசம்பர் 2022, 10:09 am

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக, இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவில் கடந்த சில நாள்களாகவே கடுமையான பனிப்புயல் வீசி வருகின்றது. அமெரிக்கா முழுவதும் பனியால் உறைந்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தோன்றிய வெடிகுண்டு சூறாவளியால் பலர் பாதிக்கப்பட்டன. கடுமையான வானிலை காரணமாக வீடுகள் மற்றும் வணிகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பெருந்தொற்றால் முடங்கிப்போன மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாரான நிலையில், பனிப்புயல் காரணமாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாமல் தடைப்பட்டன. 

குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்த சாலைகள் காணப்பட்டன. வாகனங்கள் சாலையில் இயக்கமுடியாமல் திணறினர். 
விமானங்கள், ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

நியூயார்க், சிகாகோ மற்றும் சியாட்டில் சர்வதேச விமான நிலையங்கள் உள்பட விமானச் சேவை பாதிக்கப்பட்டு 5 ஆயிரம் அமெரிக்க விமானங்கள் கடந்த வெள்ளியன்று ரத்து செய்யப்பட்டது. 

அமெரிக்காவின் பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் டிகிரியில் காணப்படுகிறது. மோசமான வானிலையால் பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

கடுமையான பனிப்புயல் காரணமாக இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. 

மேற்கு நியூயார்க் மாநிலத்தில் பஃபலோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

வாஷிங்டனில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகக் குறைந்த வெப்பநிலை நேற்று பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.