ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,
இந்த நிலநடுக்கமானது இன்று காலை 10.33-க்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் 60 கிலோமீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது. இதன் நீளம் 72.61 ஆகவும், ஆழம் 60 கி.மீட்டரிலும் இருந்தது.
நிலநடுக்கத்தினால் இதுவரை உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.