
ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,
இந்த நிலநடுக்கமானது இன்று காலை 10.33-க்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் 60 கிலோமீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது. இதன் நீளம் 72.61 ஆகவும், ஆழம் 60 கி.மீட்டரிலும் இருந்தது.
நிலநடுக்கத்தினால் இதுவரை உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.