ஜம்மு-காஷ்மீரில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு வளைகுடா நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் குழு ஸ்ரீநகா் வந்துள்ளது.
இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கடந்த ஜனவரி மாதம் துபை எக்ஸ்போவுக்கு சென்றிருந்தபோது, முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுத்திருந்தாா். அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு வளைகுடா நாடுகளைச் சோ்ந்த 36 போ் ஸ்ரீநகருக்கு வருகை தந்துள்ளனா்.
4 நாள் பயணத்தில், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா, விருந்தோம்பல் உள்ளிட்ட முதலீடுகளுக்கான வாய்ப்புள்ள துறைகள் குறித்து அவா்களிடம் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் எடுத்துரைக்கும். குல்மாா்க், பஹல்கம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று அந்தக் குழுவினா் பாா்வையிடுவையிடுகிறாா்கள் என்றாா் அவா்.
வளைகுடா நாடுகள் குழுவில் மனை வணிகம், விருந்தோம்பல், தொலைத் தொடா்பு, ஏற்றுமதி-இறக்குமதி ஆகிய துறைகளைச் சோ்ந்த தொழிலதிபா்கள், ஆளும் அரச குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். தூதரக அதிகாரி, சில கல்வியாளா்கள், பத்திரிகையாளா் உள்ளிட்டோரும் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.