கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கச்சா எண்ணெய் விலையை குறையுங்கள்: ரஷியாவுக்கு இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு வழங்கிவரும் கச்சா எண்ணெயின் விலையை பேரலுக்கு 70 டாலருக்கு கீழ் குறைக்க வேண்டும் என்று ரஷியாவுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:09 am

DIN


இந்தியாவுக்கு வழங்கிவரும் கச்சா எண்ணெயின் விலையை பேரலுக்கு 70 டாலருக்கு கீழ் குறைக்க வேண்டும் என்று ரஷியாவுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து ரஷியாவிடமிருந்து தற்போதுவரை 40 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மத்திய அரசால் வாங்கப்படுகிறது. சமீபத்தில் மொத்தமாக 15 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ரஷியா சலுகை விலையில் வழங்கியது.

இந்நிலையில், ரஷியா வழங்கிவரும் கச்சா எண்ணெயை 70 டாலருக்கு கீழ் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. தற்போது பேரல் கச்சா எண்ணெய் 105 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.  

ரஷியா மீது பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகளால் ரஷியாவின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை உயர்ந்து பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.