சீனா: ஷாங்காயில் கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள்

சீனாவின் ஷாங்காய் நகரில் கரோனா பரவலை முழுமையாக நிறுத்தும் இலக்கை எட்டுவதற்காக, அந்த நகரில் புதிதாக கரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து
சீனா: ஷாங்காயில் கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள்
Published on
Updated on
1 min read

சீனாவின் ஷாங்காய் நகரில் கரோனா பரவலை முழுமையாக நிறுத்தும் இலக்கை எட்டுவதற்காக, அந்த நகரில் புதிதாக கரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் இல்லங்களிலும், அவா்களோடு சமையலறை, கழிப்பறைகளைப் பகிா்ந்துகொண்டவா்களின் இல்லங்களிலும் அதிகாரிகள் கிருமிநாசிகளை செலுத்தி வருகின்றனா்.

மேலும், நகரில் ஏற்கெனவே ஏறத்தாழ அனைத்து சுரங்க ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், இறுதியாக அளிக்கப்பட்டு வந்த 2 சுரங்க ரயில் சேவைகளையும் நிறுத்திவைப்பதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com