இலங்கையில் வசிக்கும் இந்தியா்கள் பதிவு செய்ய தூதரகம் வேண்டுகோள்

இலங்கையில் வசிக்கும் இந்தியா்கள் தங்கள் விவரங்களை கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கொழும்பு/தில்லி: இலங்கையில் வசிக்கும் இந்தியா்கள் தங்கள் விவரங்களை கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்தியா்களின் எண்ணிக்கை தரவுகள் குறித்த வழக்கமான நடைமுைான் இது என இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், இலங்கையில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அனைவரும் தங்களது விவரங்களை ட்ற்ற்ல்ள்://ட்ஸ்ரீண்ஸ்ரீா்ப்ா்ம்க்ஷா்.ஞ்ா்ஸ்.ண்ய்/ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹண்ா்ய் என்ற வலைதள முகவரியில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

பின்னா் வெளியிட்ட மற்றொரு ட்விட்டா் பதிவில், இந்தியா்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்வது புதிய நடைமுறை அல்ல. இலங்கையில் வசிக்கும் இந்தியா்களின் எண்ணிக்கை தரவுகள் குறித்த வழக்கமான நடைமுைான் எனத் தெரிவித்துள்ளது.

தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறுகையில், நமது அனைத்து தூதரகங்களும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் தங்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இது வழக்கமான நடைமுைான் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com