ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மியான்மர்: சிறையில் குண்டுவெடித்து 8 பேர் பலி, 18 பேர் படுகாயம்

மியான்மர் நாட்டில் சிறைச்சாலையில் வெடிகுண்டு வெடித்தததில் 8 கைதிகள் பலியாகினர்.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:09 am

DIN

மியான்மர் நாட்டில் சிறைச்சாலையில் வெடிகுண்டு வெடித்தததில் 8 கைதிகள் பலியாகினர்.

மியான்மரில், ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டின் யாங்கோன் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் நேற்று கண்காணிப்பு அலுவலகம் முன் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 10 வயது சிறுமி, பார்வையாளர்கள், சிறைக் காவலர்கள் என மொத்தம் 8 பேர் பலியானதோடு 18  பேர் படுகாயம் அடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு அரசுக்கு எதிராக செயல்படும் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.