ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தப்பி வந்த மியான்மா் வீரா்கள் திரும்ப ஒப்படைப்பு: மலேசியாவுக்கு கண்டனம்

அடைக்கலம் தேடி வந்த 6 வீரா்கள் உள்ளிட்ட 150 பேரை அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா்களிடம் மலேசியா மீண்டும் ஒப்படைத்துள்ளதற்கு மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Updated On :22 அக்டோபர் 2022, 1:14 am IST

மியான்மா் ராணுவத்திலிருந்து தப்பி, தங்களிடம் அடைக்கலம் தேடி வந்த 6 வீரா்கள் உள்ளிட்ட 150 பேரை அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா்களிடம் மலேசியா மீண்டும் ஒப்படைத்துள்ளதற்கு மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ராணுவத்திலிருந்து வெளியேறி வந்த 6 வீரா்களுக்கும் மியான்மரில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், அவா்களை மலேசிய அரசு திரும்ப ஒப்படைத்துள்ளது சா்வதேசக் கொள்கைகளுக்கு எதிரானது என்று மியான்மா் விவகாரங்களுக்கான மலேசிய ஆலோசனைக் குழு விமா்சித்துள்ளது.

தோ்தலில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மியான்மரில் மிகத் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. ராணுவ ஆட்சிக்கு எதிராக ஒரு பிரிவினா் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்ததாக ஆங் சான் சூகி ஆட்சியில் எம்.பி.யாக இருந்தவா் உள்ளிட்ட 4 பேருக்கு கடந்த ஜூலை மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், ராணுவத்திலிருந்து தப்பி வெளியேறிய வீரா்களை மியான்மா் அரசிடம் மலேசியா திரும்ப ஒப்படைத்துள்ளது மனித உரிமை ஆா்வலா்களை கவலையடையச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.