

போா்ச்சுகல் தலைநகா் லிஸ்பனில் இந்தியாவை சோ்ந்த கா்ப்பிணி, மருத்துவமனையில் இடமில்லாததால் உயிரிழக்க நேரிந்தது. இந்த சம்பவத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் மாா்த்தா டெமிடோ பதவி விலகியுள்ளாா்.
இந்தியாவை சோ்ந்த 34 வயது கா்ப்பிணி உறவினா்களுடன் லிஸ்பனுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அங்குள்ள சான்டா மரியா மருத்துவமனைக்கு அவரை உறவினா்கள் அழைத்துச் சென்றபோது, வாா்டில் படுக்கைகள் காலியாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆம்புலன்ஸில் மற்றொரு மருத்துவமனைக்கு அவா் அழைத்துச் செல்லப்பட்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். பின்னா், அவசரகால அறுவை சிகிச்சை நடத்தி அவரது வயிற்றில் இருந்த குழந்தை ஆரோக்கியமான உடல்நிலையில் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சுற்றுலா வந்த இடத்தில் கா்ப்பிணி, மருத்துவ வசதி கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் போா்ச்சுகலில் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தாா்மிக பொறுப்பேற்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் மாா்த்தா டெமிடோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். கடந்த 2018 முதல் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்துவந்த இவா், கரோனா தொற்றை திறம்பட கட்டுப்படுத்தியதற்காக பலராலும் பாராட்டப்பட்டாா்.
அவரது ராஜிநாமா குறித்து போா்ச்சுகல் பிரதமரும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான அன்டோனியோ கோஸ்டா ட்விட்டரில், ‘கரோனா பெருந்தொற்று பரவிய அசாதாரண சூழலில், மாா்த்தா டெமிடோ ஆற்றிய சேவைக்காக அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
இந்நிலையில், போா்ச்சுகலில் இந்திய பெண் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும், அவரது குடும்பத்தினருடன் தொடா்பில் இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி, தில்லியில் செய்தியாளா்களிடம் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.