உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ஆப்கனில் உணவுத் தட்டுப்பாடு அபாயம்: உலக நாடுகளுக்கு ஐநா வேண்டுகோள்

ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையால் மக்கள் பசி, பட்டினியால் வாடும் நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு திட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:21 pm IST

ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையால் மக்கள் பசி, பட்டினியால் வாடும் நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு திட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.போதிய உற்பத்தியின்மை, விநியோகச் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கனில் நிலவி வரும் நிதிப் பற்றாக்குறை மற்றும் அரசியல் சூழல் காரணமாக அந்நாட்டு மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் 2.3 கோடி பேர் பசியால் வாடும் சுழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலை நாள்தோறும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால் அவற்றை பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே அந்நாட்டில் கோதுமை இருப்பு குறைந்துவருவதாக எச்சரிக்கட்டு வந்த நிலையில் தற்போது ஏற்பட உள்ள உணவு தானிய பற்றாக்குறையைத் தவிர்க்க 440 கோடி அமெரிக்க டாலர்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கலைத் தவிர்க்க உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு உதவ முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் அவை கேட்டுக் கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.