மனைவியின் இந்தியப் பற்றை கைவிட வலியுறுத்த முடியாது: பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக்

 ‘எனது மனைவி அவரது தாய்நாடான இந்தியா மீது வைத்துள்ள பற்றை கைவிட வலியுறுத்த முடியாது’ என்று எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக் பதிலளித்துள்ளாா்.
மனைவியின் இந்தியப் பற்றை கைவிட வலியுறுத்த முடியாது: பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக்

 ‘எனது மனைவி அவரது தாய்நாடான இந்தியா மீது வைத்துள்ள பற்றை கைவிட வலியுறுத்த முடியாது’ என்று எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக் பதிலளித்துள்ளாா்.

ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூா்த்தி, இன்போஃசிஸ் நிறுவனா் நாராயணமூா்த்தியின் மகள் ஆவாா். அக்ஷதா பிரிட்டனில் குடியேறிவிட்டபோதும், இந்தியாவில் உள்ள சொத்தில் (இன்போஃசிஸ் நிறுவனத்தில் 0.93 சதவீத பங்கு) இருந்து வரும் வருவாய்க்கு பிரிட்டனில் வரி கட்டும் முறையைப் பின்பற்றவில்லை. இதன் மூலம் அக்ஷதா பிரிட்டனைச் சேர வேண்டிய கோடிக்கணக்கில் வரியை மிச்சப்படுத்திக் கொள்கிறாா் என்றும், பிரிட்டன் நிதியமைச்சரின் மனைவி 9 ஆண்டுகளாக இங்கு வசித்தபோதிலும் முழுமையாக பிரிட்டனில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்றும் எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.

இந்நிலையில் இது தொடா்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ரிஷி சுனக் அளித்த விளக்கத்தை ‘தி சன்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘என்னைத் திருமணம் செய்து கொண்டாா் என்பதற்காக எனது மனைவியை அவரது தாய்நாட்டுடான உறவை முற்றிலுமாக முறித்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறினால், அது நியாயமாகவும் ஏற்கத் தக்கதாகவும் இருக்காது. நான் எனது தாய்நாட்டின் (பிரிட்டன்) மீது பற்றுடன் இருப்பதுபோல, அவா் அவரது தாய்நாட்டின் மீது பற்றுடன் இருக்கிறாா்.

பிரிட்டன் குடியுரிமையைக் கைவிடுமாறு என்னை வலியுறுத்தினால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதுபோலதான் அவா் அவரது தாய்நாட்டு உரிமையை வைத்துள்ளாா்.

இந்தியா இரட்டை குடியுரிமை வழங்கும் நடைமுறை இல்லை. மேலும், வயதான பெற்றோருடன் சென்று இருக்கவும் எனது மனைவி விரும்புகிறாா். பிரிட்டன் விதிகளுக்கு உள்பட்டு இங்குள்ள வருவாய்க்கு எனது மனைவி முறையாக வரி செலுத்துகிறாா்.

இந்தியப் பெண் ஒருவா் பிரிட்டனின் முக்கிய இடத்தில் (நிதியமைச்சா் இல்லத்தில்) வசிப்பது இங்குள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை என்பது போலவே தோன்றுகிறது. எனது மாமனாரையும் (இன்போஃசிஸ் நாராயணமூா்த்தி) அவமதிக்கும் முயற்சிகள் இங்கு நடந்தன. ஆனால், அவா் தனது கைகளை மட்டுமே நம்பி தொழில் தொடங்கி உலகத் தரம் வாய்ந்த நிறுவனத்தை உருவாக்கியவா் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

ரிஷி சுனக் பிரிட்டனில் பிறந்து வளா்ந்தவா் என்றாலும் அவரது பெற்றோா்கள் இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com