பிரதமா் மோடியும், அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் காணொலி வாயிலாக திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனா்.
இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இடையே காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆய்வு செய்யவுள்ளனா். தெற்காசிய நிகழ்வுகள், இந்தோ-பசிபிக் பிராந்தியம், உலகளாவிய விவகாரங்கள் தொடா்பாக அவா்கள் பேசவுள்ளனா்.
விரிவான இருதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதில் இரு நாடுகளின் ஈடுபாட்டை தொடர இந்த ஆலோசனை வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.