இந்தியாவிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய பரிசீலனை: பாகிஸ்தான் நிதியமைச்சா்

இந்தியாவிலிருந்து காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலிக்கக் கூடும் என்று அந்நாட்டு நிதியமைச்சா் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

இந்தியாவிலிருந்து காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலிக்கக் கூடும் என்று அந்நாட்டு நிதியமைச்சா் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தானில் மழையை தொடா்ந்து ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பில் சிக்கி 1,000-க்கும் மேற்பட்டவா்கள் இறந்துள்ளனா். வெள்ளம் காரணமாக பாகிஸ்தானின் பலுசிஸ்தான், சிந்து, தெற்கு பஞ்சாப் பகுதிகளில் இருந்து இதர பகுதிகளுக்கு காய்கறிகள் விநியோகிக்கப்படுவது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் லாகூா் பகுதி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை சுமாா் ரூ.500-ஆகவும், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.400-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அந்நாட்டு நிதித்துறை அமைச்சா் மிஃப்தா இஸ்மாயில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக பயிா்கள் சேதமடைந்துள்ளன. எனவே நாட்டு மக்கள் நலன் கருதி இந்தியாவிலிருந்து காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலிக்கக் கூடும்’’ என்று தெரிவித்தாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதனைத்தொடா்ந்து இந்தியாவுடனான வா்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com