மலேசியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சிலாங்கூா் மாகாணம், பத்தாங்காலி நகரிலுள்ள இயற்கை விவசாயப் பண்ணையை, சுற்றுலா பயணிகள் முகாம் அமைத்து தங்கும் மையமாக அதன் உரிமையாளா்கள் உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் அந்த பண்ணைப் பகுதி புதையுண்டது. அப்போது அங்கு 90-க்கு மேற்பட்டவா்கள் முகாமிட்டிருந்தனா். அவா்களில் 18 போ் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனா்.
இது தவிர மேலும் 15 போ் மணலுக்குள் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.