பல்லுயிர் பாதுகாப்புக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்

சமூக பொருளாதார மேம்பாட்டிற்கும், உலகளாவிய நீடித்த தன்மைக்கும் சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம் என்று மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறினார். 
பல்லுயிர் பாதுகாப்புக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்

சமூக பொருளாதார மேம்பாட்டிற்கும், உலகளாவிய நீடித்த தன்மைக்கும் சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம் என்று மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறினார். 

கனடாவின் மான்ட்ரியல்  நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் மாநாட்டில்,  சிஓபி 15 இன் பங்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல், பருவ மாறுபாடு மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பேசினார். 

அப்போது, இந்த மாநாட்டில் 2020 உலகளாவியப் பல்லுயிர் கட்டமைப்பின் அம்சங்கள் குறித்த  அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்து உருவாகும் என நம்புகிறேன்.

சுற்றுச்சூழல் சீரழிவை மாற்றியமைப்பது மற்றும் உலக அளவிலான பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துதல், சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கும், மனிதகுலத்திற்கும்,  நிலைத்தன்மைக்கும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பது, உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம். உலகின் பணக்கார தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் கலவையை உள்ளடக்கிய அதன் வளமான பல்லுயிரியலை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் இந்தியா செயல்பட்டு வருகிறது. 

உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள்,  தன்னுள் லட்சியத்தைக் கொண்டதாக இருப்பது மட்டுமல்லாமல்,  நடைமுறைக்கு சாத்தியமானதாகவும், நடைமுறை ரீதியாகவும் இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார்.  பல்லுயிர் பெருக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது கட்டாயம் என்றுக் குறிப்பிட்டவர்,  ஏனெனில், பருவ மாறுபாடு பிரச்னைக்கு  நாடுகள், அவரவர் சூழலுக்கு ஏற்ப எடுக்கும் நடவடிக்கைகள் பல்லுயிர் பெருக்கத்தை பாதிக்கிறது என்றார்.

வளரும் நாடுகளைப் பொருத்தவரை, கிராமப்புற மக்களின் வருமானத்திற்கான ஒரு முக்கிய பொருளாதாரக் காரணியாக விவசாயமே திகழ்வதால், வேளாண்மைக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவை ஒருபோதும் மாற்றக்கூடாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.  

இந்தியாவின் பெரும்பான்மையான கிராமப்புற மக்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளை நம்பியிருக்கிறார்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்காக நரேந்திர மோடி அரசு விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்களை வழங்குகிறது. எனவே, பல தேசிய முன்னுரிமைகள் இருப்பதால், விவசாயம் தொடர்பான மானியத்தை குறைப்பதற்கும், சேமிப்பை பல்லுயிர் பாதுகாப்புக்கு மாற்றுவதற்கும் இந்தியா உடன்படவில்லை.

வளரும் நாடுகளுக்கு உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் பட்சத்தில்,  பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற இலக்குகளைப் பரிந்துரைப்பது தேவையற்றது என்று குறிப்பிட்ட அமைச்சர், உலக  நாடுகள் தங்கள் தேசியச் சூழல்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்துக்கொள்ளவிடுவதே உகந்ததாக இருக்கும் என யோசனைத் தெரிவித்தார். 

பல்லுயிர் பாதுகாப்புக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அதுவும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், பல்லுயிர் பாதுகாப்புக்கு, இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளைக் காட்டிலும், சுற்றுச்சூழல் சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பெரும்பாலான சுமைகளை வளரும் நாடுகள் ஏற்கின்றன, ஆனால் நன்மைகள் உலகளாவியவை என்றார். 

வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதி ஆதாரங்களை உருவாக்க ஏதுவான, புதிய மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய வழிமுறைகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை அமைப்பதில் ஒருமித்த கருத்தை எட்டும் என்று பூபேந்திர யாதவ் நம்பிக்கை தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com