தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இந்தியாவின் நிதிநிலை அறிக்கையை பாராட்டி தள்ளிய சர்வதேச நிதியம்

இந்தியாவுக்கான சிந்தனை மிக்க கொள்கை திட்டத்தை நிதிநிலை அறிக்கையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 பிப்ரவரி 2022, 9:40 am

DIN

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை கலவையான விமரிசனங்களை பெற்றுவந்தன. மூலதன செலவு மற்றும் கதி சக்தி திட்டம் இந்தியாவில் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வழிவகுக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், இது முதலாளித்துவத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை என பொருளாதார ஆய்வறிஞர்கள் விமரிசித்தனர்.

இந்நிலையில், இந்தியாவின் நிதிநிலை அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள சர்வதேச நிதியம், இது சிந்தனை மிக்க கொள்கை திட்டம் எனக் கூறியுள்ளது.

இதுகுறித்து விரிவாக பேசிய சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, "மனித மூலதன முதலீடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் புதுமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவிற்கு மிகவும் வலுவான வளர்ச்சியை நாங்கள் கணித்து வருகிறோம். 

ஆம், 2022 ஆம் ஆண்டிற்கான எங்கள் முந்தைய கணிப்புக்கு எதிராக 9.5 சதவீதத்திலிருந்து 9 சதவீதத்திற்கு சிறிய தரமிறக்கம் உள்ளது. ஆனால், 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு சிறிய மேம்படுத்தலும் உள்ளது. ஏனெனில், நிலையான வளர்ச்சியைக் காண்போம் என்று நாங்கள் நினைக்கிறோம். 

கோவிட்-19 தொற்று காலத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். அதேபோல, தொற்றுநோய் தொடர்ந்து இருந்தால், தெளிவான முன்னோக்கி வழிகாட்டுதலின் மூலம் விவேகமான முறையில் நிதி நிலைமைகளை இறுக்குவது உள்பட பல காரணிகளின் மீது நிபந்தனை விதிக்கப்படும். 

இதுவரை, நாம் பார்ப்பது என்னவென்றால், நிதி நிலைமைகளின் இறுக்கம் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறவில்லை. முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில், விகிதங்களின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இல்லை. 

ஏன்? வளர்ந்து வரும் சந்தைகளுக்கு இது போன்ற கடினமான சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதும் பலப்படுத்த வேலை செய்திருப்பதாலும், பணவீக்க அழுத்தங்களை எதிர்கொண்டவுடன் அவர்களில் பலர் விவேகமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாலும் பெரிய பிரச்னையாக மாறவில்லை.

இந்தியா குறுகிய காலப் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. நீண்ட கால கட்டமைப்பு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இருப்பினும், மனித மூலதன முதலீடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் புதுமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், நாங்கள் மிகவும் சாதகமாக இருக்கிறோம். பொருளாதாரக் கருவிகளைப் பயன்படுத்தி பருவநிலை மாற்ற நிகழ்ச்சி நிரலை இந்தியா எவ்வாறு முடுக்கிவிடலாம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.