ரஷிய படைகள் உக்ரைனை தாக்கி வரும் நிலையில் அண்டை நாடான லிதுவேனியாவில் அவசர நிலை அமல்படுத்துவதாக அதிபர் கிடானாஸ் நௌசேடா தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனுடன் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும் லிதுவேனியாவில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அதிபர் கிடானாஸ் நௌசேடா அறிவித்துள்ளார்.