ரஷியா, உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5-வது நாளாக தீவிர ராணுவத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இருநாட்டுப் பிரதிநிதிகளும் இன்று (திங்கள்கிழமை) மாலை பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தின.
இதையும் படிக்க | உக்ரைன் போர்: 24 மணி நேரத்தில் 3வது முறையாக மோடி ஆலோசனை
இந்தப் பேச்சுவார்த்தையானது தற்போது நிறைவடைந்துவிட்டதாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷியப் பிரதிநிதிக் குழுத் தலைவர் கூறியதாக ஸ்புட்னிக் வெளியிட்ட செய்தியின்படி, ரஷியா, உக்ரைன் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை போலந்து, பெலாரஸ் எல்லையில் நடைபெறவுள்ளது.