மெக்ஸிகோ: கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சமாக உயர்வு

கரோனாவால் மெக்ஸிகோவில் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 3 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மெக்ஸிகோ: கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சமாக உயர்வு
மெக்ஸிகோ: கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சமாக உயர்வு

கரோனாவால் மெக்ஸிகோவில் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 3 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலகளவில் கரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தொற்று பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. கட்டுப்பாடு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டுவரும் சூழலில் மெக்ஸிகோவில் தொற்றின் தீவிரத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், மெக்ஸிகோவில் கடந்த 2020-லிருந்து  தற்போது வரை 3 லட்சம் பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். நேற்று(ஜன.10) கரோனா தொற்றின் காரணமாக 108 பேர் பலியானதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 3,00,334 ஆக உயர்ந்தது.

மேலும், இதுவரை மெக்ஸிகோவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 41.3 லட்சமாக பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com