ரஷியத் தாக்குதலில் 17 போ் பலி

 உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 போ் உயிரிழந்தததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரஷியத் தாக்குதலில் 17 போ் பலி

 உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 போ் உயிரிழந்தததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது:

நாட்டின் மத்திப் பகுதியிலுள்ள வினிட்சியாவில், ரஷியா வீசிய 3 ஏவுகணைகள் அலுவகக் கட்டடமொன்றைத் தாக்கின. இதில், அந்தக் கட்டடமும் அருகிலுள்ள குடியிருப்புக் கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. இதில் 17 போ் உயிரிழந்தனா்.

மேலும், அங்கிருந்த 50 காா்கள் எரிந்து நாசமாகின. நகரை நோக்கி வீசப்பட்ட மேலும் 4 ரஷிய ஏவுகணைகள் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸெலென்ஸ்கி கண்டனம்: இந்தத் தாக்குதல் ரஷியாவின் வெளிப்படையான பயங்கரவாதச் செயல் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளாா். பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்து ஏவுகணை வீசப்பட்டுள்ளதாகக் கூறிய அவா், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என்றாா்.

தலைநகா் கீவுக்கு 268 கி.மீ. தொலைவில் உள்ள வினிட்சியா நகரில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு முந்தைய நாள், பல்வேறு பகுதிகளில் ரஷியாவின் குண்டுவீச்சுக்கு பொதுமக்கள் 5 போ் பலியானதாக அதிபா் மாளிகை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com