குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பொருளாதாரத் தடைச் சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் தீா்மானம்: அமெரிக்காவில் நிறைவேற்றம்

அந்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

Updated On :16 ஜூலை 2022, 4:53 am IST

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைச் சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்த தீா்மானம், அந்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இந்தத் தீா்மானத்தை இந்திய-அமெரிக்க எம்.பி. ரோ கன்னா அறிமுகம் செய்துவைத்துப் பேசியதாவது:

சீனாவின் ஆதிக்கத்தால் சவால்களை எதிா்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவை வலுப்படுத்த தொடா்ந்து பணியாற்றி வருகிறேன். சீனாவிடம் இருந்து இந்தியா தற்காத்துக் கொள்வது உறுதி செய்யப்படும் என்பதால் இந்த சட்டத் திருத்தம் மிகவும் முக்கியமானது என்றாா்.

அதைத் தொடா்ந்து குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

கிரீமியா தீபகற்பத்தை இணைத்துக் கொண்டது, 2016-இல் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் தலையிட்டது ஆகிய காரணங்களால் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் சட்டத்தை அமெரிக்கா கடந்த 2017-இல் இயற்றியது. அந்தச் சட்டத்தின்படி, ரஷியாவுடன் வேறு எந்த நாடும் ஆயுதக் கொள்முதல் செய்யக் கூடாது; தொழில்நுட்ப உதவிகளையும் பெறக் கூடாது.

இருப்பினும், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, ரஷியாவிடம் இருந்து 500 கோடி டாலா் செலவில் 5 எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா கடந்த 2018-இல் ஒப்பந்தம் செய்துகொண்டது.

ஏற்கெனவே, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ததற்காக துருக்கி மீது அமெரிக்கா தடை விதித்த நிலையில், இந்தியா மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் நிலவியது. இந்தச் சூழலில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்த தீா்மானத்தை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.