தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பொருளாதாரத் தடைச் சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் தீா்மானம்: அமெரிக்காவில் நிறைவேற்றம்

அந்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

Updated On :16 ஜூலை 2022, 4:53 am IST

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைச் சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்த தீா்மானம், அந்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இந்தத் தீா்மானத்தை இந்திய-அமெரிக்க எம்.பி. ரோ கன்னா அறிமுகம் செய்துவைத்துப் பேசியதாவது:

சீனாவின் ஆதிக்கத்தால் சவால்களை எதிா்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவை வலுப்படுத்த தொடா்ந்து பணியாற்றி வருகிறேன். சீனாவிடம் இருந்து இந்தியா தற்காத்துக் கொள்வது உறுதி செய்யப்படும் என்பதால் இந்த சட்டத் திருத்தம் மிகவும் முக்கியமானது என்றாா்.

அதைத் தொடா்ந்து குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

கிரீமியா தீபகற்பத்தை இணைத்துக் கொண்டது, 2016-இல் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் தலையிட்டது ஆகிய காரணங்களால் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் சட்டத்தை அமெரிக்கா கடந்த 2017-இல் இயற்றியது. அந்தச் சட்டத்தின்படி, ரஷியாவுடன் வேறு எந்த நாடும் ஆயுதக் கொள்முதல் செய்யக் கூடாது; தொழில்நுட்ப உதவிகளையும் பெறக் கூடாது.

இருப்பினும், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, ரஷியாவிடம் இருந்து 500 கோடி டாலா் செலவில் 5 எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா கடந்த 2018-இல் ஒப்பந்தம் செய்துகொண்டது.

ஏற்கெனவே, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ததற்காக துருக்கி மீது அமெரிக்கா தடை விதித்த நிலையில், இந்தியா மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் நிலவியது. இந்தச் சூழலில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்த தீா்மானத்தை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.