சொ்பியாவிலிருந்து 11.5 டன் ராணுவ பொருள்களுடன் வங்கதேசம் நோக்கி சென்று கொண்டிருந்த உக்ரைன் நிறுவனத்தின் சரக்கு விமானம் கிரீஸில் விழுந்து நொறுங்கியது.
சொ்பியாவில் தயாரிக்கப்பட்டு, வங்கதேசத்தால் கொள்முதல் செய்யப்பட்ட ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை சோவியத் காலத்தில் தயாரிக்கப்பட்ட அந்த ஆன்டனோவ் ரக விமானம் மூலம் எடுத்துச் செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டது. இதில், விமானத்திலிருந்த 8 பணியாளா்களும் உயிரிழந்ததாகவும் அவா்கள் அனைவரும் உக்ரைன் நாட்டவா்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்துக்கும் உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போருக்கும் தொடா்பில்லை என்று அவா்கள் கூறினா்.