மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பெண்களின் திருமண வயதை 18 ஆக உயர்த்தியது மலேசியா!

மலேசியாவின் கெடா மாநிலத்தில் பெண்களில் திருமண வயது 16 முதல் 18 ஆக உயர்த்தியுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2022, 4:29 pm IST

கோலாலம்பூர்: மலேசியாவின் கெடா மாநிலத்தில் பெண்களில் திருமண வயது 16 முதல் 18 ஆக உயர்த்தியுள்ளது. 

கெடா மாநில முதல்வர் முஹம்மது சனூசி மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருமணம் தொடர்புடைய திருத்த சட்ட மசோதா ஒன்று அவையில் தாக்கல் செய்தார். 

இதன்படி, இஸ்லாம் பெண்கள் திருமணம் செய்வதற்கு சட்டப்பூர்வ வயது 16-ல் இருந்து 18-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்ளும் குறைந்தபட்ச பக்குவம் இந்த வயதில் அடைவார்கள் என்பதற்காக வயது உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. 

மேலும், குறைந்தபட்ச வயதுக்குக் கீழ் திருமணம் செய்துகொள்ள அனுமதி கோருபவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இஸ்லாமிய நீதிமன்றத்தில் முன் அனுமதியைப் பெற வேண்டும்.

மேலும், நீதிமன்ற அனுமதியின்றி ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அபராத தொகையாக 3 ஆயிரம் ரிங்கிட் (சுமார் 673 அமெரிக்க டாலர்கள்) ஆகவும், ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாநில அரசு மசோதா திருத்தத்தை நிறைவேற்றியது. 

இளம்வயதில் திருமணம் என்பது நாட்டில்  ஒரு சர்ச்சைக்குரிய பிரச்னையாகவே உள்ளது. குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக இருக்க வேண்டும். சிறுவயது திருமணத்தால் பல பெண்கள் உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்வதோடு, தங்கள் வாய்ப்புகளையும் இழக்கின்றனர் என்று மலேசிய வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். 

கடந்த 2020-ஆம் ஆண்டில் வடக்கு போர்னியா மாநிலமான சரவாக் உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 183 வழக்குகள் வயதுக்குட்பட்ட திருமண விண்ணப்பங்கள் இருந்ததாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.