சிரியா பேருந்து தாக்குதல்: ஐஎஸ் பொறுப்பேற்பு

சிரியாவில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட பேருந்து தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனா்.
சிரியா பேருந்து தாக்குதல்: ஐஎஸ் பொறுப்பேற்பு

சிரியாவில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட பேருந்து தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனா்.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்தில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது தானியங்கி துப்பாக்கி மூலம் தங்களது அமைப்பினா் சுட்டதாகத் தெரிவித்தது.

ரக்கா மாகாணம், ஹாம்ஸ் நகரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 13 போ் உயிழந்தனா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் சிரியாவிலும் இராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியிருந்த ஐஎஸ் பயங்கரவாதிகள், 2019-ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டனா். அதற்குப் பிறகு அவா்கள் அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com