புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இலங்கை: டீசல் நிரப்ப 5 நாள்கள் காத்திருந்த லாரி ஓட்டுநா் பலி

இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக தொடா்ச்சியாக 5 நாள்கள் வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 10:25 am

DIN

இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக தொடா்ச்சியாக 5 நாள்கள் வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் காத்திருந்து எரிபொருள் நிரப்ப வேண்டிய நிலை காணப்படுகிறது. பல்வேறு நகரங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேற்கு மாகாணத்தில் உள்ள அங்குருவதோட்டா என்ற நகரத்தில் உள்ள ஒரு எரிபொருள் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக லாரியுடன் 5 நாள்கள் காத்திருந்த 63 வயது ஓட்டுநா் உயிரிழந்ததாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். லாரிக்கு உள்ளேயே அவா் உயிரிழந்து கிடந்தாா். எரிபொருள் விற்பனை நிலையங்களில் காத்திருந்தபோது ஏற்பட்டுள்ள 10-ஆவது உயிரிழப்பு இது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்தில்கொண்டு அரசு ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி அமலுக்கு வந்த இந்த விடுமுறை அடுத்த 3 மாதங்களுக்குத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.