இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை தொடக்கம்: போர் முடிவுக்கு ரஷியா எதிர்பார்ப்பு

​உக்ரைன் மக்கள் அமைதி வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும், டான்பாஸில் அமைதி திரும்புவதற்கும் உக்ரைன் போர் சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் என ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது.

News image
Updated On :3 மார்ச் 2022, 2:43 pm

DIN


உக்ரைன் மக்கள் அமைதி வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும், டான்பாஸில் அமைதி திரும்புவதற்கும் உக்ரைன் போர் சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் என ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 8-வது நாளாக தீவிர ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையொட்டி பெலாரஸ் நாட்டில் இருநாட்டுப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. உக்ரைன் பிரதிநிதிகள் ஹெலிகாப்டர் மூலம் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர்.

இதுபற்றி ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

"ரஷியா, உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை பெலாரஸில் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து டான்பாஸில் அமைதி திரும்புவதற்கும் உக்ரைன் மக்கள் அனைவரும் அமைதி வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும் உக்ரைன் வழிவகுக்கும் என எதிர்பார்க்கிறோம்."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.