உக்ரைன் மக்கள் அமைதி வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும், டான்பாஸில் அமைதி திரும்புவதற்கும் உக்ரைன் போர் சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் என ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 8-வது நாளாக தீவிர ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையொட்டி பெலாரஸ் நாட்டில் இருநாட்டுப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. உக்ரைன் பிரதிநிதிகள் ஹெலிகாப்டர் மூலம் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர்.
இதையும் படிக்க | பிரான்ஸ் நாட்டினர் ரஷியாவை விட்டு வெளியேற அறிவுறுத்தல்
இதுபற்றி ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
"ரஷியா, உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை பெலாரஸில் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து டான்பாஸில் அமைதி திரும்புவதற்கும் உக்ரைன் மக்கள் அனைவரும் அமைதி வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும் உக்ரைன் வழிவகுக்கும் என எதிர்பார்க்கிறோம்."