சுமி: ஒரு நாள் முன்பு மனிதாபிமான அடிப்படையில் திறக்கப்பட்ட வெளியேறும் பாதை இன்றும் திறக்கப்படும் என்று உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியின் ஆளுநர் கூறினார்.
உக்ரைன் அரசாங்கத்தின் கூற்றுப்படி, இரண்டு வெளியேற்ற நிலைகளில் சுமார் 5,000 பேர் சுமியை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ரஷிய எல்லைக்கு அருகில் உள்ள சுமி, பல நாட்களாக ரஷிய குண்டுவீச்சுக்கு உள்ளாகியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
மார்ச் 7-ம் தேதி மட்டும் மூன்று குழந்தைகள் உள்பட 22 பேர் ரஷிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிள்ளது.