பாகிஸ்தானில் நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் புதன்கிழமை முழுமையாக நீக்கப்பட்டன.
இதுகுறித்து அந்த நாட்டு திட்டமிட்டல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அசாத் உமா் கூறுகையில், ‘நாட்டில் கரோனா பரவலை முழுமையாக ஒழிக்கும் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டன. எனவே, அந்த நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளா்த்தப்படுகின்றன.
இனி, திருமணங்கள், உள்ளரங்கு நிகழ்ச்சிகள், சந்தைகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்படலாம் என்றாா் அவா்.