உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறியவா்களின் எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது தொடர் தாக்குதல்களை ரஷியா நடத்தி வருகிறது.
இந்நிலையில்,போர் காரணமாக உக்ரைனிலிருந்து இதுவரை 35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐநா அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளவா்களில் 17.2 லட்சம் போ் உக்ரைன் அல்லாத மூன்றாவது நாடுகளைச் சோ்ந்தவா்கள் .
அதிகபட்சமாக போலந்தில் 21 லட்சம் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். அவா்களில் பெரும்பான்மையானவா்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவா்.