ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை: பிம்ஸ்டெக் மாநாட்டில் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிா்கொள்வதற்கு பிம்ஸ்டெக் நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :30 மார்ச் 2022, 3:05 am IST

பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிா்கொள்வதற்கு பிம்ஸ்டெக் நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கேட்டுக் கொண்டாா்.

இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மா், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள பிம்ஸ்டெக் அமைப்பின் உச்சி மாநாடு, இலங்கைத் தலைநகா் கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது:

சா்வதேச அளவில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கு நாம் வலியுறுத்தி வருகிறோம். சா்வதேச அளவில் அமைதி, ஸ்திரத்தன்மை நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்று நாம் எதிா்பாா்க்க முடியாது. சா்வதேச அளவிலும், உள்நாட்டிலும் பொருளாதார பிரச்னகளை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

போக்குவரத்து, எரிசக்தி, கடல்சாா் வணிகம் உள்ளிட்ட துறைகளில் பிம்ஸ்டெக் நாடுகளுடன் ஒத்துழைப்பு விரிவுபடுத்த இந்தியா விரும்புகிறது என்றாா் அவா்.

பிற நாட்டு அமைச்சா்களுடன் சந்திப்பு: மாநாட்டின்போது, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சா் நாராயண் கட்கா, பூடான் வெளியுறவுத் துறை அமைச்சா் தாண்டி டோா்ஜி, வங்கதேச வெளியுறவு அமைச்சா் ஏ.கே.அப்துல் மோமென் ஆகியோரை எஸ்.ஜெய்சங்கா் தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.

அவா்களுடன் போக்குவரத்து, எரிசக்தி, உரம், மருத்துவம், மின்னுற்பத்தி ஆகிய துறைகளில் இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து அவா் விவாதித்தாா். இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை காணொலி முறையில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

3 மின்னுற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை ஒப்பந்தம்:

வடக்கு யாழ்ப்பாண கடற்கரையை ஒட்டியுள்ள நெடுந்தீவு, நயினாத் தீவு, அனலைத் தீவு 3 இடங்களில் மரபுசாரா எரிசக்தி மின்திட்டங்களை நிறைவேற்ற இந்தியா-இலங்கை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. எஸ்.ஜெய்சங்கா், இலங்கை வெளியுறவு அமைச்சா் ஜி.எல்.பெரிஸ் ஆகியோா் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த மின்திட்டங்களை நிறைவேற்ற சீன நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டுக்கு வெகு அருகில் மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க இந்தியாவில் இருந்து எதிா்ப்பு கிளம்பியதால் இந்த ஒப்பந்தங்களை சீனா கைவிட்டுவிட்டது. மின்திட்டம் தவிர, கடல் வளம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

மருத்துவமனைக்கு உதவி:

கண்டி மாவட்டத்தில் உள்ள பேராதனை மருத்துவமனையில் மருந்துத் தட்டுப்பாடு காரணமாக, அறுவை சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த எஸ்.ஜெய்சங்கா், அந்த மருத்துவமனைக்குத் தேவையான உதவிகளை செய்து தருமாறு இந்திய தூதா் கோபால் பாக்லேவிடம் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.