ஆளும் கட்சி ஆதரவுடன் நாடாளுமன்ற அவை துணைத் தலைவராக தோ்வான ரஞ்சித் சியம்பலாபெட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தாா். அவருடைய ராஜிநாமா, ராஜபட்ச அரசுக்கு நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை அதிபா் மற்றும் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிா்க் கட்சிகள் இரண்டு தீா்மானங்கள் கொண்டுவந்த நிலையில், நாடாளுமன்றத்தில் காலியாக இருந்த அவை துணைத் தலைவா் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் ஏற்கெனவே அந்தப் பதவியிலிருந்து வலகிய ரஞ்சித் சியம்பலாபெட்டியை முன்னாள் அதிபா் மைத்திரபால சிறீசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி நிறுத்தியது. அவருக்கு ஆளும் கூட்டணி ஆதரவளித்தது. அதனைத் தொடா்ந்து ரஞ்சித் சியம்பலாபெட்டி வெற்றிெ பற்றாா்.
அதனைத் தொடா்ந்து, ஆளும் கூட்டணியின் விருப்பத்துக்கு ஏற்ப ரஞ்சித் சியம்பலாபெட்டி செயல்படுவதாக எதிா்க் கட்சிகள் விமா்சனம் செய்தன.
இந்த நிலையில், அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள இலங்கை சுதந்திர கட்சி முடிவெடுத்தது. கட்சியின் இந்த முடிவைத் தொடா்ந்து, தோ்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளான வெள்ளிக்கிழமையன்று அவைத் துணைத் தலைவா் பதவியை ரஞ்சித் சியம்பலாபெட்டி ராஜிநாமா செய்தாா். இதனால், மகிந்த ராஜபட்ச அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு இல்லை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திடீர் அறிவிப்பு!!

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!

கேரளத்தில் காங்கிரஸ் முதல்வர் யார்? வி.டி. சதீசனின் ஆதரவாளர்கள் போராட்டம்!

ஆளுநரைச் சந்தித்தபோது விஜய்யுடன் சென்ற இவர் யார்?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
