
ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த விமானம்
சீனாவில் ஓடுபாதையில் புறப்பட தயாரான விமானம் இன்று காலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோங்கிங் ஜியாங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8 மணியளவில் திபெத் ஏர்லைன்ஸ் விமானம் 113 பயணிகள், 9 ஊழியர்களுடன் புறப்பட்டது.
ஓடுபாதையில் சிறிது தூரம் சென்ற விமானம் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தை அறிந்த விமானிகள், விமானத்தை உடனடியாக நிறுத்தி பயணிகள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றியதால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சில பயணிகளுக்கு சிறு காயம் ஏற்பட்டதால், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி புல்வெளிக்கு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
According to reports, at about 8:00 on May 12, a Tibet Airlines flight deviates from the runway and caught fire when it took off at Chongqing Jiangbei International Airport.#chongqing #airplane crash #fire pic.twitter.com/re3OeavOTA
— BST2022 (@baoshitie1) May 12, 2022