லண்டன்: மார்ச் மாதம் விபத்துக்குள்ளான சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே செங்குத்தாக மோதியதென்று விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தகவல்கள் தெரிவிக்கிறது என்று அமெரிக்க ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் எந்த இயந்திர அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளையும் புலனாய்வாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று பிபிசி தெரிவித்துள்ளது.
ஏபிசி நியூஸ், அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இந்த விபத்து வேண்டுமென்றே செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற ‘போயிங் 737’ விமானம் குவாங்ஜி ஜுவாங் பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது.
இதையும் படிக்க: அசாம்: கனமழையால் 4 லட்சம் பேர் பாதிப்பு