தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் 43 பயணிகளுடன் சென்ற விமானம் ஞாயிற்றுக்கிழமை ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணித்தவர்களில் இதுவரை 26 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும்போது விபத்து நிகழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.