இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகினர், மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் திங்கள்கிழமை காலை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 எனப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த 20 பேரும் ஒரே மருத்துவமனையைச் சேர்ந்த நோயாளிகள் என முதற்க்ட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.