இந்நிலையில், பெய்ஜிங்கின் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றனர். அந்நாட்டின் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை “காலை 11:30 மணிக்கு மாணவர்கள் கேன்டீனின் நுழைவாயிலில் பதாகைகளைப் பிடித்தப்படி போராடங்களில் ஈடுபடத் தொடங்கினர், பின்னர் அதிகமான மக்கள் திரள ஆரம்பித்தனர். போராட்டத்தின் போது மாணவர்கள் 'தேசிய கீதம்' மற்றும் 'சர்வதேசம்' பாடினார்கள். பின்னர், சில மாணவர்கள் அரசுக்கும், அதிபருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர், ஆனால், எதிர் கோஷங்கள் சத்தமாக இல்லை. போராட்டதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் உண்மையில் என்ன கோஷம் எழுப்பது என்பது தெரியாமலே பங்கேற்றிருந்தனர். மேலும், ‘கரோனா கட்டுப்பாடு வேண்டாம்', 'சுதந்திரம் வேண்டும்', 'சுதந்திரம் வெல்லும்' என்று மாணவர் கோஷங்களை எழுப்பினர்