Enable Javscript for better performance
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகாத உலகம்: ஐ.நா. கவலை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகாத உலகம்: ஐ.நா. கவலை

    By DIN  |   Published On : 13th October 2022 04:15 PM  |   Last Updated : 13th October 2022 04:20 PM  |  அ+அ அ-  |  

    world-unprepared-for-climate-change

    கோப்புப்படம்

    காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் இன்னும் தயாராகவில்லை என ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது. 

    காலநிலை மாற்ற பிரச்னை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு நாடுகளும் பெருமழை, வெள்ளம், அதீத வெப்ப அலைகளின் பாதிப்பு, பருவநிலை பிறழ்வு உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொண்டு வருகின்றன. 

    இந்நிலையில் அதிகரித்துவரும் காலநிலை மாற்ற பாதிப்புகளுக்கு மத்தியில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் பேரிடரை எதிர்கொள்வதற்கு இன்னும் தயாராகவில்லை என ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது. 

    இதையும் படிக்க | ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு

    ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மற்றும் பேரிடர் தடுப்பு அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உலக நாடுகள் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 

    காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் உலக நாடுகள் அக்கறையின்மையுடன் உள்ளதாகவும் உலகின் வளர்ந்த நாடுகள் மற்றும் மூன்றில் ஒரு தீவு நாடுகளும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது மேலும் பல நாடுகளுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிக்க | பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ‘மெட்டா’: ரஷியா நடவடிக்கை

    2005 முதல் 2014ஆம் அஆண்டு வரையிலான காலத்தில் லட்சம் பேரில் 1147 பேர் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் 2012 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இதே எண்ணிக்கையானது 2066ஆக அதிகரித்துள்ளது. 

    அதேபோல் பேரிடர் காலத்தில் காணாமல் போன அல்லது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சம் பேரில் 1.77ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய சமகாலகட்டத்தில் 0.84ஆக இருந்தது. 

    இதுதொடர்பாக பேசிய ஐநா அவையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ், “காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கு உலகம் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp