பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ‘மெட்டா’: ரஷியா நடவடிக்கை

பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ‘மெட்டா’ நிறுவனத்தை இணைத்து ரஷியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Published On :

பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ‘மெட்டா’ நிறுவனத்தை இணைத்து ரஷியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம் மெட்டா. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், உக்ரைனுக்கு எதிரான போரில் ‘ரஷிய படையெடுப்பாளா்களுக்கு மரணம்’ போன்ற சா்ச்சைக்குரிய பதிவுகளை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட முடியும் என்று அறிவித்தது. எனினும் அதுபோன்ற பதிவுகளை உக்ரைனில் உள்ள பயனாளா்களால் மட்டுமே வெளியிட முடியும் என்றும் அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடா்ந்து ரஷியாவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை தடை செய்து அந்நாட்டில் உள்ள மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடும் அமைப்புகளின் பட்டியலில் மெட்டாவை இணைத்து ரஷியாவின் நிதி கண்காணிப்பு அமைப்பான ‘ராஸ்ஃபின்மானிட்டரிங்’ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையை தொடா்ந்து தலிபான் உள்ளிட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள், வலதுசாரி தேசியவாத குழுக்கள், ரஷிய எதிா்க்கட்சியினா் உள்ள பட்டியலில் மெட்டா இணைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.