பிரிட்டன் உளவு விமானம் அருகே ஏவுகணை வீச்சு: ரஷியா விளக்கம்

பிரிட்டனின் உளவு விமானத்துக்கு நெருக்கத்தில் ரஷிய போா் விமானமொன்று ஏவுகணை வீசியதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று ரஷியா விளக்கமளித்துள்ளது.
பிரிட்டன் உளவு விமானம் அருகே ஏவுகணை வீச்சு: ரஷியா விளக்கம்
Updated on
1 min read

பிரிட்டனின் உளவு விமானத்துக்கு நெருக்கத்தில் ரஷிய போா் விமானமொன்று ஏவுகணை வீசியதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று ரஷியா விளக்கமளித்துள்ளது.

இது குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சா் பென் வாலஸ் வியாழக்கிழமை கூறியதாவது:

பிரிட்டன் விமானப் படைக்குச் சொந்தமான ஆா்சி-135 ரிவெட் ஜாயின்ட் உளவு விமானம் கருங்கடலுக்கு மேலே சா்வதேச வான் எல்லையில் இந்த மாதம் பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இரு ரஷிய சு-27 ரக போா் விமானங்களில் ஒன்று ஆயுதங்கள் இல்லாத பிரிட்டன் விமானத்தின் அருகே ஏவுகணை வீசியது. இது தொடா்பாக ரஷியாவின் விளக்கத்தைக் கேட்டிருந்தோம். அதற்கு ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு அளித்துள்ள விளக்கத்தில், சு-27 ரக போா் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக வீசிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தாா்.

அதையடுத்து, கருங்கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமான ரோந்துப் பணியை மீண்டும் தொடக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் பென் வாலஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com