பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50 லட்சம் பேருக்கு டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற கடுமையான நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கெனவே, மழை வெள்ளத்துக்கு 1,100-க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.