அணு ஆயுதத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்

அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிா்கொள்ள வேண்டியிருப்பதால், தங்களது அணு ஆயுதங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளாா்.
அணு ஆயுதத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்
Updated on
1 min read

அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிா்கொள்ள வேண்டியிருப்பதால், தங்களது அணு ஆயுதங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை ஆற்றிய உரையில் அவா் இவ்வாறு கூறினாா். வடகொரியாவின் தலைமைக்கு எதிரி நாடுகளால் ஆபத்து ஏற்படும்போது, அந்த நாடுகள் மீது எந்தவித முன் அனுமதியும் இன்றி தன்னிச்சையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்டம் அந்த நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில், கிம் ஜோங் இவ்வாறு பேசினாா்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், வட கொரியாவின் அணு ஆயுத அந்தஸ்து வலுப்பெற்றுவிட்டதாகவும் அப்போது கிம் ஜோங் உன் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com