பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டனில் ஞாயிற்றுக்கிழமை இன்று அஞ்சலி செலுத்தினார்.
லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அரசி எலிசபெத் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் நீண்ட கால ராணியான எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் கடந்த வியாழக்கிழமை (செப்.8) இரவு காலமானார். ராணி எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரால் அரண்மனையில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து கடந்த 14ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டருக்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.
அங்கு உலக நாடுகளின் தலைவர்கள் அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இந்தியா சார்பில் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று லண்டன் புறப்பட்டார். அவருடன் வெளியுறவுத் துறை செயலாளர் வினய் குவத்ராவும் சென்றார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரம் வகுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரங்கல் குறிப்பிலும் இந்தியா சார்பில் திரெளபதி முர்மு கையெழுத்திட்டார்.
President Droupadi Murmu visited Westminster Hall London where the body of Her Majesty the Queen Elizabeth II is lying in state. The President offered tributes to the departed soul on her own behalf and on behalf of the people of India. pic.twitter.com/c1Qac7PhPd
â President of India (@rashtrapatibhvn) September 18, 2022
அதனைத் தொடர்ந்து உலக நாடுகளிலிருந்து வந்த தலைவர்களுக்காக அரசர் மூன்றாம் சார்லஸ் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரெளபதி முர்மு பங்கேற்கவுள்ளார்.
அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இந்திய நேரப்படி நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மறைந்த அரசியின் கணவரான அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடத்தினருகே ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாலையோரத்தில் பதிக்கப்பட்ட தொலைத்தொடா்பு கம்பிகளை திருடிய 3 போ் கைது

கட்டுமானப் பணியின்போது தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு

பங்குச்சந்தை 2-ஆவது நாளாக ஏற்றம்

இடைநின்ற பழங்குடி மாணவா்களை பள்ளிக்கு அழைத்து வர ஆசிரியா்கள் முயற்சி
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



