மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அரசி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் திரெளபதி முர்மு

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டனில் ஞாயிற்றுக்கிழமை இன்று அஞ்சலி செலுத்தினார்

அரசி இரண்டாம் எலிசபெத் இரங்கல் குறிப்பில் இந்தியா சார்பில் திரெளபதி முர்மு கையெழுத்திடுகிறார் 

Published On :

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டனில் ஞாயிற்றுக்கிழமை இன்று அஞ்சலி செலுத்தினார்.

லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அரசி எலிசபெத் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.   

பிரிட்டனின் நீண்ட கால ராணியான எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் கடந்த வியாழக்கிழமை (செப்.8) இரவு காலமானார். ராணி எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரால் அரண்மனையில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.  பின்னர் அங்கிருந்து கடந்த 14ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டருக்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. 

அங்கு உலக நாடுகளின் தலைவர்கள் அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அந்தவகையில் இந்தியா சார்பில் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று லண்டன் புறப்பட்டார். அவருடன் வெளியுறவுத் துறை செயலாளர் வினய் குவத்ராவும் சென்றார். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரம் வகுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரங்கல் குறிப்பிலும் இந்தியா சார்பில் திரெளபதி முர்மு கையெழுத்திட்டார். 

அதனைத் தொடர்ந்து உலக நாடுகளிலிருந்து வந்த தலைவர்களுக்காக அரசர் மூன்றாம் சார்லஸ் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரெளபதி முர்மு பங்கேற்கவுள்ளார்.

அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இந்திய நேரப்படி நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மறைந்த அரசியின் கணவரான அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடத்தினருகே ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.