பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பிரிட்டன் அரசர் சார்லஸ் காரின் மீது மோத வந்த இளைஞர்!

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் காரின் மீது இளைஞர் ஒருவர் ஸ்கேட்டிங் செய்துகொண்டு மோத வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

News image

பிரிட்டன் அரசர் சார்லஸ் காரின் மீது மோத வந்த இளைஞர்!

Updated On :1 பிப்ரவரி 2024, 3:51 pm IST


பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் காரின் மீது இளைஞர் ஒருவர் ஸ்கேட்டிங் செய்துகொண்டு மோத வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பிரிட்டன் அரசி மறைந்த இரண்டாம் எலிசபெத் உடல் வைக்கப்பட்டுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு அவரின் மகனும், அரசருமான மூன்றாம் சார்லஸ் காரில் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தார்.

இரு வழிநெடுகிலும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையையொட்டிய சாலைகளில் பொதுமக்கள் வழிநெடுகிலும் அரசி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருந்தனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், சாலையின் குறுக்கே ஸ்கேட்டிங் செய்துகொண்டு வேகமாக வந்த இளைஞர், அரசர் மூன்றாம் சார்லஸ் வந்துகொண்டிருந்த காரின் மீது மோத வந்தார். எனினும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். அரசரின் அணிவகுப்பு எந்தவித இடையூறுமின்றி சென்றது. 

இதனை அஞ்சலி செலுத்த கூட்டத்தில் இருந்த ஒருவர் விடியோ எடுத்துள்ளார். அந்த விடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.