தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

உக்ரைனில் ரஷிய ஏவுகணைத் தாக்குதல்: 8 பேர் பலி 

கிழக்கு உக்ரைன் நகரமான ஸ்லோவியன்ஸ்கில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ரஷிய ஏவுகணை நடத்திய தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். 

News image
Updated On :15 ஏப்ரல் 2023, 9:38 am

கிழக்கு உக்ரைன் நகரமான ஸ்லோவியன்ஸ்கில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ரஷிய ஏவுகணை நடத்திய தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். 

உக்ரைனில் கடந்தாண்டு ரஷியா படையெடுத்த நிலையில், ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் இதுவரை லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. 

இந்நிலையில், அல் ஜசீரா வெளியிட்ட செய்தியில், டோனெட்ஸ்க் பகுதியில் ரஷியாவின் எஸ்-300 ரக ஏவுகணை தாக்கியுள்ளன. இந்த ஏவுகணை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர். 

ரஷியா போரைத் தொடங்கியதிலிருந்து சுலோவியான்ஸ்க் நகரிலிருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேறி வருகின்றனர். 

பாக்முத் நகரை ரஷியா ஆக்கிரமித்து வரும் சூழலில் இன்னும் பல மாவட்டங்களை கைப்பற்றும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.