டெக்சாஸ் நகரங்களான ஆஸ்டின், சான் அன்டோனியோவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர்.
சான் அன்டோனியோவில் ராயல் சாலையில் அருகே உள்ள குடியிருப்பில் 50 வயதுடைய ஒரு ஆணும், பெண்ணும் இறந்து கிடந்தனர். செவ்வாயன்று ஆஸ்டினில் நடந்த தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 காவலர் உள்பட நான்கு பேர் பலியாகினர். மேலும் மூவர் காயமடைந்தனர்.
ஆஸ்டினில் நடந்த கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கும், சான் அன்டோனியோவில் நடந்த இரட்டைக் கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.