அமெரிக்காவை வாட்டி எடுக்கும் வெயில்!

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லைப்பகுதிகளில் நிலவும் வெப்பநிலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
அமெரிக்காவை வாட்டி எடுக்கும் வெயில்!
Updated on
1 min read

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லைப்பகுதிகளில் நிலவும் வெப்பநிலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் மக்களுக்கு குளிர்பானங்கள், வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள ஈரமானத் துண்டு ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை அதிகரிப்பால் வீடுகள் இல்லாத மக்களே பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல் உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலர் குளிர்ச்சியான குடிநீரை அடிக்கடி குடித்து உடலுக்கு நீர்சத்தினைப் பெறுகிறார்கள். வெப்பம் அதிகமாக இருப்பதால்  வெளி விளையாட்டுகளை தவிர்த்து விடுகின்றனர் அல்லது மாலை வெயில் குறைந்த பிறகு விளையாடுகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு அமெரிக்காவில் வெப்பநிலை மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது. இனி வரும் நாள்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவில் வெப்பநிலை பதிவாக பசுபிக் பெருங்கடல் இயற்கையாக தனது வெப்பத்தை அதிகரித்துக் கொள்ளும் எல் நினோ என்ற நிகழ்வே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com