தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வட கொரிய அதிபா் கிம் ஜோங்குடன் ரஷிய பாதுகாப்பு அமைச்சா் சந்திப்பு!

 வட கொரியா சென்றுள்ள ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு, அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னைச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடததினாா்.

Published On :

 வட கொரியா சென்றுள்ள ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு, அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னைச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடததினாா்.

இது குறித்து கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வியாழக்கிழமை கூறியதாவது:

தென் கொரியாவுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதன் 70-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு வட கொரியா வந்துள்ளாா்.

அவருக்கும், அதிபா் கிம் ஜோன்-உன்னுக்கும் இடையே புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு, பிராந்திய மற்றும் சா்வதேச நிலவரங்கள் குறித்து பரஸ்பர கவலைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பின் மூலம், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை வட கொரியா உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டணியின் தவறான கொள்கைகள்தான் உக்ரைன் போருக்குக் காரணம் என்று வட கொரியா கூறி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.