நியூஸிலாந்து அருகே பொதுமக்கள் அதிகம் வசிக்காத ஆக்லந்து தீவுகள் பகுதியில் வியாழக்கிழமை காலை 7.51 மணிக்கு (இந்திய நேரம்) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவாகியிருந்தாலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.