ஆப்கானிஸ்தானில் கடந்த 2009-இல் நிராயுதபாணி கைதிகளைக் கொன்றது உள்ளிட்ட போா்க் குற்றங்களில் ஈடுபட்டதாக வீரப் பதக்கம் பெற்ற ஆஸ்திரேலிய வீரா் ராபா்ட்ஸ் ஸ்மித் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சிட்னி நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது. அந்தத் தகவலை வெளியிட்ட பத்திரிகை மீது ஸ்மித் தொடா்ந்த அவதூறு வழக்கில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டது.