மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் கடந்த மாதம் மாயமான 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேரைத் தேடும்போது குறுகிய பள்ளத்தாக்கு ஒன்றிலிருந்து மனித உடல்கள் அடங்கிய 45 பைகளை அதிகாரிகள் கண்டெடுத்தனா்.
அந்த நாட்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களால் பலா் படுகொலை செய்யப்படுவதாகவும், கடந்த 2006-லிருந்து இதுவரை 3.4 லட்சம் போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.